வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இந்த வறட்சியான வானிலையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அதற்கமைய, 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக அதிகரிக்கும் மக்கள் பாதிப்பு
RELATED ARTICLES



