நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை குறைப்பு நடவடிக்கை இன்று (24) முதல் நடைமுறைக்கு வருவதாக லங்கா சதோச நிறுவனம் அறிவித்துள்ளது.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் குறைக்கப்பட்ட விலையில் குறித்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




