21.9 C
Sri Lanka
Sunday, August 9, 2026
HomeLocal Newsகாணாமல் போன சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்பு!

காணாமல் போன சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்பு!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று மாலை நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனைக் கண்டறியும் பணியில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து உடனடியாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். 

இரண்டாவது நாளாக இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. 

பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments