22.3 C
Sri Lanka
Wednesday, May 13, 2026
HomeLocal Newsமாமாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் – இளைஞர் உயிரிழப்பு

மாமாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் – இளைஞர் உயிரிழப்பு

வெலிகம, பரணகடே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் பரணகடே, வெலிகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். 

உயிரிழந்த இளைஞன் தனது தாய், தந்தை, இரு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இதன்போது, கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் (மாமா) இடையில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், குறித்த நபரால் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதற்கமைய, குற்றத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments