மஸ்கெலியா பிரதேசத்தின் முள்ளுகாமம் சந்தியில் புதிய பஸ் நிறுத்துமிடம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தவிசாளரின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய மாகாண போக்குவரத்து சேவை அதிகாரசபையின் தலைவர் வழங்கிய இந்த பஸ் நிறுத்துமிடம், பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பாகவும் சீராகவும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மஸ்கெலியா பிரதேசத்தில் எமது சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் நிறுத்துமிடம் தேவைப்படும் இடங்களை அடையாளம் கண்டு, எதிர்வரும் நாட்களில் அவற்றையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



