20.3 C
Sri Lanka
Sunday, April 19, 2026
HomeLocal Newsமகரகம தீப்பரவலில் 400 இலட்சம் ரூபாய் நட்டம்!

மகரகம தீப்பரவலில் 400 இலட்சம் ரூபாய் நட்டம்!

மகரகமை நகரில் இன்று (08) காலை சில வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 400 இலட்சம் ரூபாய் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

பமுனுவ புதிய வீதி அதிகாலை ஆடை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் குசும்சிறி தசநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இதனைத் தெரிவித்தார். 

இன்று காலை சில வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் எங்களுக்கு சுமார் 400 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தீ ஆடை விற்பனை நிலையமொன்றில் ஆரம்பிக்கவில்லை, மாறாக பாரம்பரிய அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் இடத்திலிருந்தே பரவியது. 

எனினும், தீ பரவியவுடன் அதனைத் தடுப்பதற்கு துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், நகர சபை ஊழியர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

அதேநேரம், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஆடைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட எவ்விதத்திலும் இடமளிக்க மாட்டோம். 

இதேவேளை, தீயணைப்புப் பிரிவினரின் தாமதமே இந்த பாரிய அழிவுக்குக் காரணம் என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments