20.3 C
Sri Lanka
Sunday, April 19, 2026
HomeSports Newsதிடீர் நீர் விநியோகத் தடை

திடீர் நீர் விநியோகத் தடை

அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, இரத்மலானை, தெஹிவளை, கல்கிசை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், பத்தரமுல்லைப் பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் வழங்கப்படுகிறது. 

நாளை (19) காலை 6 மணிக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments